பல்வேறு சமூக அமைப்புகள் சமூகச் சேவையில் ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் 2012ஆம் ஆண்டு சீன மத்திய நிதியிலிருந்து சுமார் 20 கோடி யுவான் நிதியுதவி வழங்கப்பட்டது.
முழு ஆண்டிலும் மொத்தம் 377 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 120க்கும் மேலான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 17 ஆயிரத்து 700 பேர் பயிற்சி அளிக்கப்பட்டனர். 18 இலட்சத்து 50 ஆயிரம் பொது மக்கள் அத்திட்டப்பணிகளால் நேரடி பயன் பெற்றுள்ளனர்.அதேவேளையில், சமூக அமைப்புக்கான பதிவு மற்றும் மேலாண்மை அமைப்புமுறையிலும் சீர்திருத்தம் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.