• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
  2013-02-13 16:45:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சே ச்சி அழைப்பின் பேரில் 12ஆம் நாளிரவு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் பெஃபுஸ் கேரியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். வட கொரியா மேற்கொண்ட மூன்றாவது அணுக் குண்டுச் சோதனை பற்றி இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
வட கொரியாவின் அணுக் குண்டு சோதனை பற்றி சீனா தெளிவான நிலைப்பாட்டையும் கோட்பாடுகளையும் தெரிவித்துள்ளது என்று யாங் ச்சே ச்சி கூறினார். தொடர்புடைய பல்வேறு தரப்புகள் பொது நிலைமையைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையைச் சீராகக் கையாள வேண்டும் என்றும் நிலைமை மேலும் மோசமாகாமல் தவிர்க்க வேண்டும் என்றும் சீனா கருதுவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கு முன், சீனாவுக்கான வட கொரியாவின் தூதர் Chi Jae Ryongஐ யாங் ச்சே ச்சி வரவழைத்து, அந்நாடு மேற்கொண்ட மூன்றாவது அணுக் குண்டு சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040