வசந்த விடுமுறை நாட்களில், சீனாவின் போர் தந்திர ஏவுகணைப் படை தொடர்ந்து அதிக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மோசமான வானிலையில் ஏவுகணை செலுத்துதல், சிக்கலான மின்காந்த அலைகளின் தலையீடுகளைக் கையாளுதல் முதலியவை இப்பயிற்சிகளில் இடம்பெறுகின்றன.எமது படைப்பிரிவு பல முறை ஏவுகணை செலுத்தல் மற்றும் அவசர கடமைகளை நிறைவேற்றுகின்ற பிரிவாகும். இயற்கை பேரிடர் மீட்புதவி, வெடிகுண்டு செயலிழப்பு முதலிய சில படைப்பிரிவுகளும் உள்ளன. இந்தப் பிரிவில் சுமார் 700 படையினரும் அதிகாரிகளும் எப்போதும் அவசரக் கடமைகளில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளனர் என்று ஓர் அதிகாரி கூறினார்.