சீனாவின் வட கடல் கடற்படையைச் சேர்ந்த மூன்று போர் கப்பல்களால் உருவாக்கப்பட்ட கடற்படையின் தொலைக் கடல் பயற்சிப் படை 15ஆம் நாள் காலை வசந்த விழாவின்போது மேற்குபசிபிக் கடற்பரையில் நடத்திய பயிற்சிக் கடமையை இனிதே நிறைவு செய்து, சிங்தாவ் நகருக்குத் திரும்பி சென்றது. வினியோகக் கப்பல்கள் இல்லாத நிலையில், சீனக் கடற்படையின் பெரிய தொலைவிலுள்ள கடல் பயிற்சிப் படை, தொலைக் கடலில் பயிற்சிக் கடமையை மேற்கொள்வது, இதுவே முதல் முறை.
இந்தத் தொலைக் கடல் பயிற்சிக் கடமை 18 நாட்கள் நீடித்தது. 5800க்கு மேலான கடல் மைல் பயணம் இப்பயிற்சியின்போது மேற்கொள்ளப்பட்டது.
சீனாவின் இறையாண்மை, கடல் நலன்கள், தேசிய மதிப்பு ஆகியவற்றை சீன வட கடல் கடற்படையின் அதிகாரிகளும் போர்வீரர்களும் உறுதியாகப் பேணிக்காப்பதாக இந்தப் பயிற்சிப் படையின் தலைவரும், சீன வட கடல் கடற்படையின் தலைவருமான தியான் ஜோங் கூறினார்.