• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பாவில் குதிரையிறைச்சிச் சம்பவம்
  2013-02-16 15:12:58  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐரோப்பாவின் குதிரையிறைச்சிச் சம்பவம் பற்றிய புலனாய்வு புதிய முன்னேற்றம் அடைந்துள்ளது. 15ஆம் நாள் பிரிட்டன் மாட்டிறைச்சி பற்றிய சோதனை முடிவை முதல்முறையாக வெளியிட்டது. சுமார் 1 விழுக்காடு மாட்டிறைச்சியில் குதிரையிறைச்சி கலந்திருப்பது கண்டறியப்பட்ட்து. தவிரவும், நார்வே நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியிலும் குதிரையிறைச்சி கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

பிரிட்டன் உணவு வரையறை வாரியத்தின் தகவலின்படி, பரிசோதனை செய்யப்பட்ட 2501 மாட்டிறைச்சி மாதிரிகளில், இடம் பெற்ற 29 மாதிரிகளில் குறைந்தது 1 விழுக்காடு குதிரையிறைச்சி கலக்கப்பட்டது. ஆனால் அதில் வலிகொல்லி மருந்து இல்லை. 14ஆம் நாளிரவு, குதிரையிறைச்சி கலந்து மாட்டிறைச்சியாக விற்கப்பட்ட 3 ஐயத்துக்குரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

நார்வேயின் மிக பெரிய உணவு சில்லறைக் குழுமம் இறக்குமதி செய்த மாட்டிறைச்சி துண்டுகளில் 60 விழுக்காடு, குதிரையிறைச்சி தான் என்று அக்குழுமம் 15ஆம் நாள் அறிவித்தது.

தவிர, ஜெர்மனியும், இது போன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தொடர்புடைய உணவுகளை விற்பனையிலிருந்து விலக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040