பிரிட்டன் உணவு வரையறை வாரியத்தின் தகவலின்படி, பரிசோதனை செய்யப்பட்ட 2501 மாட்டிறைச்சி மாதிரிகளில், இடம் பெற்ற 29 மாதிரிகளில் குறைந்தது 1 விழுக்காடு குதிரையிறைச்சி கலக்கப்பட்டது. ஆனால் அதில் வலிகொல்லி மருந்து இல்லை. 14ஆம் நாளிரவு, குதிரையிறைச்சி கலந்து மாட்டிறைச்சியாக விற்கப்பட்ட 3 ஐயத்துக்குரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
நார்வேயின் மிக பெரிய உணவு சில்லறைக் குழுமம் இறக்குமதி செய்த மாட்டிறைச்சி துண்டுகளில் 60 விழுக்காடு, குதிரையிறைச்சி தான் என்று அக்குழுமம் 15ஆம் நாள் அறிவித்தது.
தவிர, ஜெர்மனியும், இது போன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டு தொடர்புடைய உணவுகளை விற்பனையிலிருந்து விலக்கியுள்ளது.