வட கொரியா, இவ்வாண்டு அணு ஆயுத சோதனையை மீண்டும் நடத்தும் என்ற தகவலைச் சீனாவிடம் கூறியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இத்தகவலின் ஊற்றுகண் என்ன என்று தெரியவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூங் லெய் பிப்ரவரி 18ஆம் நாள் பெய்ஜிங்கில் இது குறித்து தெரிவித்தார். அத்துடன், நிலைமையைத் மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என்று தொடர்புடைய பல்வேறு தரப்புகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வாண்டு 2 முறை அணு ஆயுத சோதனையை மீண்டும் நடத்தி, தொலை தூர எறிவிசை ஏவுகணையை மீண்டும் செலுத்தும் என்ற தகவலை வட கொரியா சீனாவிடம் தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பிப்ரவரி 15ஆம் நாள் தெரிவித்தது. இது குறித்து, ஹூங் லெய் இவ்வாறு கூறினார்.