• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஊத்தங்ககை கிவி.செங்குட்டுவன் பொங்கள் விழாவுக்காக அனுப்பிய கவிதை
  2010-01-15 11:33:22  cri எழுத்தின் அளவு:  A A A   
பொங்கல் திருநாளாம் இந்நாளில்

பொய்ம்மை மறையும் நன்நாளில்

பொங்கல் வாழ்த்துதனை நானும்

பொறாமையின்றி கூறிட விழைகிறேன் !

 

நாட்டில் உள்ளோர் அனைவரும்

நாணயமான வாழ்வுதனை நடத்தட்டும்

நல்லோரும் வல்லோரும் இணைந்து

நானில புத்துலகை அமைக்கட்டும் !

 

உலகில் வாழும் தமிழரெல்லாம்

உயர்ந்த வாழ்வு நடத்தட்டும்

உரிமைக்குரலை நாளும் ஒலித்திடவே

உண்மையாக யாவரும் உழைக்கட்டும் !

 

தைமகள் வருகையை எல்லோரும்

தவறாமல் எதிர்க்கொண்டு நோக்கட்டும்

தமிழரின் தன்மானம் உலகில்

தனித்தன்மை யோடு திகழட்டும் !

 

தைத்திங்கள் முதல்நாள் பிறக்கட்டும்

தரணிவாழ் தமிழர்கள் சிறக்கட்டும்

பொங்கல் விழாவதுவும் மலரட்டும்

பொதுமைக் கருத்துக்கள் உலாவரட்டும் !

 

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கட்டும்

என்றென்றும் உலகமக்கள் யாவரும்

எல்லா வளமும் பெற்றிட்டே

ஏற்புடனே திகழ்ந்து மகிழட்டும் !

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040