• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
  2010-01-21 09:14:14  cri எழுத்தின் அளவு:  A A A   
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், பெய்ஜிங் மாநகரம் தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு சுவையான முறையில் விடையளித்தமைக்கு எனது நன்றிகள். குறிப்பாக, ஒரு சீனப் பாடல் பின்னணியில் மெதுவாக ஒலிக்க, கலையரசி அவர்கள் பெய்ஜிங்கின் வரலாறு பற்றி விவரித்தபோது, என்னுள் இனம்புரியாத இன்ப உணர்வு ஏற்பட்டது. பெய்ஜிங் மாநகரின் பல்வேறு பகுதிகள், பெய்ஜிங் மாநகரம் உருவான வரலாறு, அதன் பல்வேறு பெயர்கள், அதன் மத வரலாறு என பல்வேறு தகவல்களை சுவைபடத் தொகுத்து வழங்கியதற்கு எனது பாராட்டுக்கள். மேலும், மீனாவின் புத்தாண்டுரையை கேட்டபோது, கடந்த ஆண்டு, சீனாவில் பயணம் மேற்கொண்டபோது நெகிழ வைத்த செயல் நினைவுக்கு வந்தது. எனது பயணத்தின் முதல் நாளில் சீன வானொலிக் கட்டிடத்தில் நுழைந்தபோது, மீனாவும் வான்மதியும் நான் எழுதி அனுப்பிய வான் அஞ்சல் கடிதங்களை தங்கள் கைகளில் ஏந்தி என்னிடம் காட்டி வரவேற்றார்கள். அது எனது வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வாகும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040