• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் தாகூரின் படைப்புகள் வெளியிடப்படும் நிலைமை
  2011-07-01 09:03:45  cri எழுத்தின் அளவு:  A A A   








இந்தியாவின் புகழ் பெற்ற மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் 4வது கட்டுரையில் கவிஞர் தாகூரின் படைப்புகள் சீனாவில் வெளியிடப்படுவது பற்றிய தகவல்கள் பற்றி கூறுகின்றோம்.

கட்டுரை வழங்குவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை கவனமாக கேளுங்கள்.

1. தாகூருக்கும் எந்த நிறுவனத்துக்குமிடையில் பிரிக்கப்பட முடியாத உணர்வு உண்டு?

மக்கள் வெளியீட்டகத்தின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

2. தாகூரின் படைப்புத் தொகுப்பு எத்தனை ஆண்டுகளில் நிறைவேறப்படும்?

தாகூர் சீன மக்களின் நண்பகமான நண்பராகினார். இரு நாடுகளின் பண்பாட்டுப் பரிமாற்ற வரலாற்றில் அவர் முக்கிய பங்கு ஆற்றினார். 1915ம் ஆண்டு முதல் அவரது படைப்புகள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை மிகப் பல வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன. சீனாவில் விற்பனையிலுள்ள தாகூரின் படைப்புகளின் எண்ணிக்கை 150க்கு மேலாகும். நோபல் இலக்கிய விருதைபெற்ற"கீதாஞ்சலி"என்ற படைப்பு 40க்கும் மேட்பட்ட மொழிபெயர்ப்புகள் இவற்றில் அடங்கும். ஆகவே தாகூரின் படைப்புகள் சீனாவில் எப்படி வெயிடப்படுகின்றது என்பது பற்றி ஆராயலாம்.

ஆமாம். அவரது படைப்புகளை வெளியிடும் நிறுவனம் சீன வணிக அச்சிட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் சீனாவில் 1897ம் ஆண்டில் நிறுவப்பட்ட பின் சீனாவின் நவீன வெளியீட்டுத் துறை துவங்குவதை கோடிட்டுக் காட்டுகின்றது. நூறு ஆண்டுகளாக அச்சிட்டு வெளியிடும் துறையில் ஈடுபட்டுள்ள வணிக அச்சிட்டு நிறுவனம் இவ்வாண்டு வெளியிட்ட தாகூரின் படைப்புகளில் "வாழ்க்கை பற்றி தாகூர் பேசுவது","கல்வி தொடர்பான தாகூரின் கருத்துக்கள்","இலக்கியம் தொடர்பான தாகூரின் கருத்துக்கள்"ஆகியவை அடங்கும்.

இது பற்றி இந்த தொகுப்பை பதிபாசிரிப்பதற்கு பொறுப்பான பதிபாசிரியர் feng Ai zhen அம்மையார் புகந்து மதிக்கிறார். வணிக புத்தக அச்சிட்டு நிறுவனத்துக்கும் தாகூருக்குமிடை அனுபவங்களை அவர் நீளாய்வு கூருந்து பேசுகிறார்.

தாகூருக்கும் வணிக புத்தக அச்சிட்டு நிறுவனத்துக்குமிடையில் பிரிக்கப்பட முடியாத உணர்வு உண்டு. சீனாவில் வெளியிடப்பட்ட முதலாவது தாகூரின் படைப்பு வணிக புத்தக அச்சிட்டு நிறுவனத்தால் பதிப்பாசிரிக்கப்பட்டு அச்சிடப்பட்டது என்று அவர் கூறினார்.

1921ம் ஆண்டு ஷாங்காய் மாநகரில் அமைந்த வணிக புத்திக அச்சிட்டு நிறுவனம் தாகூர் எழுதிய "வசந்தத்தின் புழக்கம்"என்ற நாடகப் படைப்பை வெளியிட்டது. அந்த ஆண்டு தாகூர் படைத்த நாடகத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. 2011ம் ஆண்டு "தாகூரின் சிறந்த கட்டுரைகள் அடங்கிய மொழியாக்க தொகுப்பு"தாகூரின் 150வது பிறந்த நாளுக்கான அன்பளிப்பாக வணிக புத்தக அச்சிட்டு நிறுவனம் வெளியிட்டது.

இது பற்றி feng Ai zhen அம்மையார் கூறியதாவது.

நான் மற்றவரை நேசிக்கின்றேன். நானும் மற்றவரால் நேசிக்கப்படுகின்றேன் என்ற தாகூரின் கூற்றால் நான் மனமுருகப்பட்டேன். முதுமையாகிய போது பெருமையுடன் இந்த வாக்கியத்தை வெளிப்படையாக பேசினால் அவர் வாழ்ந்த வாழ்க்கை மதிப்புக்குரியது. மனதில் அன்பு உள்ளவர் இத்தகைய எளிதான அவரது வாழ்க்கையை சுருக்கும் வாக்கியத்தை பேச முடியும். என் வாழ்க்கை சாதாரணமாக இருக்கின்றது. ஆனால் நான் வாழ்வில் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும் என்று அவர் தாகூர் படைத்த நாடகத் தொகுப்பைப் பதிபாசிரித்த உணர்வை வர்ணிக்கிறார்.

தாகூர் உலகின் வாசகர்களால் அறிந்து கொள்ளப்பட்ட கவிஞர். "கீதாஞ்சலி" உள்ளிட்ட 8 கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் பல்வேறு நாடுகளால் வெளியிடப்பட்டன. மிகப் பல வாசகர்களால் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டவை. சீன ஒலி மற்றும் ஒளி வெளியீட்டக நிறுவனம் 5 ஆண்டுகளை பிடித்து 2010ம் ஆண்டில் இந்த 8 தொகுப்புகள் முழுவதையும் சீன வாசகர்களின் கண்முன்னால் வெளியிட்டது.

இந்த தொகுப்பைத் தொகுப்பதற்குப் பொறுப்பான பதிப்பாசிரியர் gao zi ru அம்மையார் இந்த தொகுப்பு நூல்களின் தனிச்சிறப்பை பற்றி கூறியதாவது.

நாங்கள் வெளியிட்ட தொகுப்புகள் ஆங்கிலத்தில் இருக்கின்ற 8 கவிதைத் தொகுப்புகளாகும். இந்த நூல்களில் ஆங்கிலத்துக்குச் சமமான சீன மொழி விளக்கம் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையின் மொழிபெயர்புக்கு பின் கருத்துரை சேர்க்கப்படுகின்றது. இளம் வாசகர்கள் தாகூரின் கவிதைகளை படிக்கும் போது இவை உதவி வழங்கும்.

சீனாவில் சில தலைமுறையினர்கள் தாகூரின் கவிதைகளை படித்து ரசிக்கின்றனர். தாகூர் சீனாவுக்கு ஏற்படுத்திய செல்வாக்கு மிக ஆழந்தது என்று gao zi ru அம்மையார் பாராட்டியுள்ளார்.

கவிதைகள் தவிர தாகூர் படைத்த புதினமும் சீனாவில் மிகபரந்தளவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

2005ம் ஆண்டு சீன மொழியில் மொழியாக்கப்பட்ட தாகூரின் புதினத்தில் அவர் படைத்த அனைத்து குறுங்கடைகளும் குறுகிய மற்றும் நீளமான கதைகளும் சேர்க்கப்படுகின்றன. இவற்றை பதிப்பாசிரிப்பதற்குப் பொறுப்பான zhang hui jun அம்மையார் இந்த தொகுப்பு வேலை பற்றி கூறியதாவது.

தாகூரின் புதினம் இந்தியாவின் அப்போதைய சமூக வெளிப்பாடாக திகழலாம். 19வது நூற்றாண்டில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலைமையை இந்த புதினத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்திய மக்கள் மீது தாம் கொண்டுள்ள அன்பு மற்றும் அனுதாபம் ஆகியவற்றை இந்த புதினம் எடுத்துக்காட்டுகின்றது.

வங்காள மொழியில் தாகூரின் படைப்புத் தொகுப்பு வெளியிடுவது சீனாவிலுள்ள வங்காள மொழித் துறை பல ஆண்டுகளாக நிறைவேற்ற விரும்பிய கனவாகும். அதற்கான ஆயத்த பணி மக்கள் வெளியீட்டகத்தின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தாகூரின் படைப்புத் தொகுப்புக்கு ஒரு கோடிக்கு மேட்பட்ட எழுத்துக்கள் உண்டு. 5 ஆண்டுகளில் இந்த தொகுப்பு வேலை நிறைவேற எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய அரசும் வங்காள தேச அரசும் இதன் வெளியீட்டில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன. இந்திய அரசுத் தலைவரும் சிறப்பாக வாழ்த்துச் செய்தியை அனுப்பினார். தாகூரின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வாய்ப்பினை மூலம் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடை இலக்கியம் மட்டுமல்ல சமூக வாழ்க்கியிலான நட்பும் வளர்ச்சியடையச் செய்துள்ளது.

தலைமுறை தலைமுறையாக சீன-இந்திய நட்பு வளர்வது இரு நாட்டு மூத்த தலைவர்கள் மற்றும் மக்கள் நீண்டகால முயற்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் 4வது கட்டுரையைக் கேட்டீர்கள். இதுவரை அறிவுப் போட்டிக்கான 4 கட்டுரைகளும் ஒலிபரப்பபட்டுள்ளன. போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040