2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப்பொருட்காட்சியின் நிறைவு விழா அக்டோபர் 31ம் நாளிரவு ஷாங்காயில் நடைபெற்றது. ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் மனிதகுலத்தின் நாகரிக புத்தாக்கத்தின் சாதனைகள் ஒன்று திரட்டப்பட்டன. 246 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் வெற்றிகரமான, தலைசிறந்த உலகப்பொருட்காட்சியில் கூட்டாக பங்கெடுத்துள்ளன என்று, சீனத் துணை தலைமையமைச்சர் வாங்ச்சிசான் நிறைவு விழாவில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.
சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைவர் Jean-Pierre LAFON இவ்விழாவில் உரை நிகழ்த்திய போது, ஷாங்காய் உலகப்பொருட்காட்சி மாபெரும் நிகழ்ச்சி ஒன்றின் வெற்றியாகவும், உலகப்பொருட்காட்சி இலட்சியத்தின் வெற்றியாகவும் திகழ்கிறது என்று பாராட்டினார்.
மே திங்கள் முதல் நாள் தொடங்கிய ஷாங்காய் உலகப்பொருட்காட்சி, மொத்தம் 7 கோடியே 30 இலட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது.