முனுகபட்டு பி.கண்ணன்சேகர்
2010-12-23 16:04:59 cri எழுத்தின் அளவு: A A A
சீனத்தலைவர் வென்ச்சியாபாவ் மேற்கொண்ட இந்திய பயணம் இந்தியாவில் அனைத்து தலைவர்களுக்கும் திருப்தியான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றால் அதுதான் உண்மை! ஆளூம் கட்சி எதிர்க்கட்சி முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர் கலந்துரையாடல் செய்திருப்பது இந்தியாவின் ஆதரவை முழுமையாக பெற்றுள்ளார் என்று சொல்லவேண்டும். இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் நாள் புதுதில்லியை விட்டுப் புறப்படும் முன், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்திக்கையில், தற்போது சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தும் சீன-இந்திய உறவு, இருநாட்டு அரசுகள் மற்றும் பல்வேறு சமூகத் துறைகள் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் பயனாகும் என்று கூறினார். புதிய நிலைமையில் பாரதீய ஜனதாக் கட்சி சீனாவுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதையும் இருநாடுகளுக்கிடையில் அரசியல் நம்பிக்கையை அதிகரித்து ஒத்துழைப்பை விரிவாக்கி, நட்புறவை வலுப்படுத்துவதில் செயலாக்க பங்காற்றுவதையும் வரவேற்பதாகவும் வென்ச்சியாபாவ் கூறியது மற்றும் வென்ச்சியாபாவின் இந்தியப் பயணம் இருநாட்டுறவின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்றும், இருநாட்டு நட்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்ற பாரதீய ஜனதாக் கட்சி இடைவிடா முயற்சி மேற்கொள்ள விரும்புகிறது என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பதின் மூலம் அனைத்து தலைவர்களின் பாராட்டுதல்களை சீனத்தலைவர் பெற்றுள்ளார் என்பது முக்கியமானதாகும்.
தொடர்புடைய செய்திகள்