கலை........வணக்கம் நேயர்களே. மாட்டுப் பொங்கல் என்றும், கனுப் பொங்கல் என்ற பெயரிலும் கொண்டாடப்படும் இன்று பொங்கல் விழாவின் மூன்றாவது நாள். நமது தொடர் சிறப்பு நிகழ்ச்சிகளின் மூன்றாவது நாளும் கூட.
புஷ்பா.......இன்றைய நிகழ்ச்சியின் முதல் பகுதியில் நேற்றைய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பெய்ஜிங் தகவல் தொடர்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பங்கு பெற்ற சிறப்பு பட்டி மன்ற நிகழ்ச்சி இடம் பெறுகிறது. கேட்டு ரசியுங்கள்.
கலை........ பெய்ஜிங் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் பொங்கல் விழாவுக்காக எமது நேயர் நண்பர்களுக்கான பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கியதற்கு மிக்க நன்றி.
புஷ்பா....... புகழ் பெற்ற எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான திரு லேனா தமிழ்வானன் அவர்களை ஆசிரியர் புஷ்பா ரமணி அம்மையார் கண்ட பேட்டியை வழங்குகின்றோம். கேளுங்கள்.
கலை.......என்ன நேயர்களே பொங்கல் தமிழ் விருந்து எப்படி இருந்தது. பொங்கலைப் போலவே இனிய சுவையாக இருந்திருக்குமென்று நினைக்கிறோம்.
புஷ்பா......நாளை உழவர் திருநாளாகும். சிறப்பு நிகழ்ச்சி உண்டு. மீண்டும் நாளைச் சந்திப்போம்.
கலை........நேயர்களே இத்துடன் பொங்கல் விழாவுக்கான 3ம் நாள் சிறப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. நாளைய நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்.
புஷ்பா......வணக்கம் நேயர்களே.