இரவில் திரும்பிய போது, அவர்கள் புதிதாக கட்டியமைக்கப்பட்ட உயர்வேக நெடுஞ்சாலையில் 15தே நிமிடத்தில் Dujiangyan சென்றடைந்தனர்.
இந்த புதிய உயர்வேக நெடுஞ்சாலை, மே 12ம் நாள், அதாவது வென்ச்சுவன் நிலநடுக்கம் நிகழ்ந்த ஓராண்டு நினைவு நாளில் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வரும். 5 மணி நேரம் மற்றும் 15 நிமிட நேரம் என்ற இரு வித பயண அனுபவத்திற்குப் பின், சீன வானொலி நிலையத்தில் பணியாற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த Gabriella அம்மையார் மகிழ்ச்சியுடன் கூறியதாவது,
5 மணி நேரம், 15 நிமிடம், இரண்டுக்குமிடையில் வேறுபாடு மிக பெரியது. புதிய உயர்வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பின், yingxiu மாவட்டத்திற்கு மறுசீரமைப்புக்கான பொருட்களை அனுப்புவதற்கு மிக வசதியாக இருக்கும். புதிய நெடுஞ்சாலை, இங்குள்ள மறுசீரமைப்புப் பணிக்கு பெரிய நன்மை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.