பாஸிசம் எதிர்ப்பு உலகப் போர் வெற்றியின் போது ஐ.நா நிறுவப்பட்டது. 1942ம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், ஜெர்மன், இத்தாலிய மற்றும் ஜப்பானிய பாசிசத்தின் மீது போரிட்டு கொண்டிருக்கின்ற சீனா, அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் முதலிய 26 நாடுகளின் பிரதிநிதிகள், வாஷிங்டனில் ஐ.நா அறிக்கையை வெளியிட்டனர். 1945ம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் 25ம் நாள், 50 நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்காவின் சன் பிரான்சிஸ் சோவில் ஐ.நா சர்வதேச அமைப்பின் கூட்டத்தை நடத்தினர். ஜூன் திங்கள் 26ம் நாள், போலந்து உட்பட்ட 51 நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா சாசனத்தில் கையொப்பமிட்டனர். 1945ம் ஆண்டின் அக்டோபர் திங்கள் 24ம் நாள், சீனா, பிரான்ஸ், சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா முதலிய நாடுகள், ஒப்புதல் பத்திரத்தைச் சமர்ப்பித்தன. அதன் பிறகு, ஐ.நா சாசனம் அதிகாரப்பூர்வமாக நடைமுறையாக தொடங்கியது. ஐ.நா அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. அக்டோபர் திங்கள் 24ம் நாள் ஐ.நா நாளாகும் என்பதை ஐ.நா பொது பேரவை 1947ம் ஆண்டு தீர்மானித்தது.