சட்டப்பூர்வ உரிமை மீட்சி
2011-10-19 10:59:21 cri எழுத்தின் அளவு: A A A
சீன மக்கள் குடியரசின் ஐ.நாவிலுள்ள சட்டப்பூர்வ உரிமை மீட்கப்பட்டது, நவ சீனா தூதாண்மை வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாகும். நவ சீனா நிறுவப்பட்ட அந்நாள் முதல், முழு சீன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு சட்டப்பூர்வ அரசாகத் திகழ்கிறது. அது ஐ.நாவில் இடம்பெறுவதே நியாகமாகும். ஆனால், அந்த இடத்தைத் தைவான் குவோமிங்தாங் கட்சி அதிகார வட்டாரம் வைத்திருந்தது. 1971ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள், 26வது ஐ.நா பொதுப் பேரவை கூட்டத்தில், சீனாவின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுக்கும் கருத்துருவுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 76 வாக்குகள் ஆதரவாகவும், 35 வாக்குகள் எதிராகவும், 17 வாக்கெடுப்பில் பங்கெடுக்காமலும் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில், சீன மக்கள் குடியரசின் சட்டப்பூர்வ உரிமை மீட்கப்பட்டது. அவ்வாண்டு நவம்பர் முதல் நாள், சீன மக்கள் குடியரசின் 5 நட்சத்திரச் செங்கொடி ஐ.நாவில் முதன்முதலாக ஏற்றப்பட்டு காற்றில் பட்டொளி வீசிப்பறந்தது.
தொடர்புடைய செய்திகள்