2011ம் ஆண்டு மே திங்கள் வரை, ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கைகளில் சீனப் படை கலந்து கொண்டது. 18 ஆயிரத்து 515 படை அதிகாரிகளும் போர்வீரர்களும் அமைதி காப்புக்கு அனுப்பப்பட்டனர். கடமையைச் செயல்படுத்திய போது, 9 போர்வீரர்கள் இறந்தனர். அனுப்பப்பட்ட அமைதி காப்பு போர்வீரர்களின் மொத்த எண்ணிக்கையில், ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனாவிலிருந்து சென்ற வீரர்களே மிக அதிகம்.
8700க்கு மேலான கிலோமீட்டர் பாதைகளையும் 270 பாலங்களையும் சீனா அமைதி காப்பு படை, புதிதாக கட்டியமைத்தது. 8900 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. 60 ஆயிரத்துக்கு மேலான டன் பொருட்கள் அனுப்பப்பட்டன. 79 ஆயிரம் பேருக்கு சீனா அமைதி காப்பு படை சிகிச்சை அளித்தது.