1994ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5ஆம் நாள் சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர் சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் சமூகத்தின் பொதுத்துறை மற்றும் சமூகக் காப்புறுதித் துறையில் தன் விருப்பத்துடன் கலந்து கொள்ளும் பல்வேறு துறைகளின் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட நாடு தழுவிய சமூக அமைப்பாகும். நாட்டின் இளைஞர்களுடைய தன்னார்வத் தொண்டர் பணிகளுக்கு வழிகாட்டி, தொண்டு செய்தல், அன்பு காட்டல், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் என்னும் தன்னார்வ எழுச்சியை ஓங்கித் தழைக்கச் செய்வது. சோஷியலிச எழுச்சி மற்றும் நாகரிகக் கட்டுமானத்தையும் சோஷியலிசச் சந்தை பொருளாதார அமைப்பு முறையின் உருவாக்கத்தையும் மேம்பாட்டையும் முன்னேற்றுவது, இளைஞர்களின் ஒட்டுமொத்த பண்பை உயர்த்திச் சமூகப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த நல்லிணக்கமான வளர்ச்சிக்குப் பங்கு ஆற்றுவது. இவை இச்சங்கத்தின் நோக்கங்களாகும். 2010ஆம் ஆண்டு மே திங்கள் ஐ• நா பொருளாதார மற்றும் சமூகச் செயற்குழுவின் சிறப்பு ஆலோசனை தகுநிலையை இச்சங்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
1998ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில், இளைஞர் தன்னார்வத் தொண்டர்களின் பணிகளை வழிநடத்தும் மையம் ஒன்றைச் சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்திய குழு உருவாக்கியது. அது இளைஞர் தன்னார்வச் சேவைகளின் ஒருங்கிணைப்பு, வழிகாட்டல் மற்றும் திட்டமிடலுக்குப் பொறுப்பேற்றது. 1995ஆம் ஆண்டு முதல் குடியிருப்புப் பகுதிகளில் இளைஞர் தன்னார்வத் தொண்டர்களின் சேவை நிலையங்களைக் கட்டியமைக்கும் பணி துவங்கியது. தற்போது, சீனாவில் இத்தகைய சேவை நிலையங்களின் எண்ணிக்கை 24ஆயிரத்துக்கு மேலாகும்.