சென்னை புஷ்பா ராமாணி அம்மையார்
2012-03-07 09:45:15 cri எழுத்தின் அளவு: A A A
சீன பேரவை கூட்டத் தொடரில் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அவர்கள் உள்நாட்டுத் தேவையை விரிவு படுத்துவது, குறிப்பாக உள்நாட்டு நுகர்வோர்த் தேவையை விரிவு படுத்துவது, சீனாவின் நிலையான வளர்ச்சிக்கு அடிப்படை என்பதைச் சுட்டி காட்டி இருக்கிறார். இந்தக் கூற்று, அவரது தேர்ந்த அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. முதலில் உள்நாட்டு தேவையை முழுமைப் படுத்துவதுதான் ஆட்சியாளர்களின் முதற் கடமை என்பதை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். விலைவாசியைச் சீராக்குவது, விவசாயிகளின் தொடர் வருமானத்திற்கு உத்திரவாதம் தருவது போன்ற அம்சங்களும் மகிழ்ச்சியைத் தருகிறது. மக்களின் முழுமையான நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் திட்டங்கள் நிச்சயமாக வெற்றி பெறும். இந்தப் பேரவை கூட்டத் தொடர் அதை நிறைவேற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தொடர்புடைய செய்திகள்