சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடரில்
விலைவாசியின் பொதுவான நிலைமையை நிதானப்படுத்தும் வகையில், இவ்வாண்டு, நடவடிக்கைகள் பலவற்றைச் சீனா மேற்கொள்ளும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சாங் பிங் கூறினார். இதுதான் மக்களின் முக்கிய பிரச்சனையாகும். இதற்கு முக்கியத்துவம் அளித்து, கடந்த காலங்களில் சீனாவின் வேளாண்மை தொடர்ந்து 8 ஆண்டுகளாக அமோக அறுவடையைக் கொண்டதாக இருந்து வருகிறது. தானிய இருப்பு அளவு செழிப்பாக இருக்கிறது.
மேலும், புழக்க ஒழுங்கைச் சீர்த்திருத்தம் செய்து, சந்தைக் கண்காணிப்பைவலுப்படுத்துவது முதலிய நடவடிக்கைகளைச் சீனா மேற்கொள்ளும். ஆகவே,இவ்வாண்டின் விலைவாசியைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தது மக்களின் வாழ்க்கைநிலையை உயர்த்த உதவும்.