• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி
  2012-03-07 10:34:52  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டம் மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் கோலகலமாக துவங்கியதை அறிந்தேன். மதிப்பிற்குரிய தலைமை அமைச்சர் திரு வென்ச்சியாபாவ் அவர்கள் அரசின பணியறிக்கையினை சுமார் 3000 பிரதிநிதிகளின் முன்னிலையில் சமர்பித்து அரசின் பணிகளை தொகுத்து கூறியதோடு மட்டுமின்றி 2012ம் ஆண்டில் அரசு பின்பற்றும் பணி நெறிமுறைகளை விவரித்தையும் அறிந்தேன் இவ்பணி அறிக்கையின் மூலமாக 2010-ம ஆண்டைவிட 2011-ம் ஆண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 9.2 விழுக்காடு அதிகரிப்பு, பொது நிதிவருவாய் 24.8 விழுக்காடு அதிகரிப்பு மற்றும் தானிய விளைச்சல் 5லட்சத்து 7கோடி டன் என்ற இலக்கினை எட்டி புதிய சாதனை போன்ற புள்ளி விவரங்களை உற்று நோக்கும் போது சீன அனைத்து துறைகளிலும் அசைக்கமுடியாத சாம்பியனாக இன்றளவும் விளங்கி வருகின்றது என்பதை உலகிற்க்கு பறை சாற்றியுள்ளது அதிலும் குறிப்பாக சீன நகர மக்களின் நபர்வாரி வருமானம் 8.4 விழுக்காடும் கிராம வாசிகளின் நபர்வாரி வருமானம் 11.4விழுக்காடு என்ற விகிதத்தில் அதிகரித்து இருப்பதை உற்று நோக்கினால் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சியில் நல்லமேம்பாட்டினை அடைந்திருக்கிறார்கள் என்பது எளிதில் அனைவருக்கும் விளங்கும். தமிழ்பிரிவு இணையதளத்தில் சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டியில் ஆண்டு கூட்டத்தொடர் என்ற தலைப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது.பாராட்டுக்கள்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040