வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
2012-03-15 14:34:26 cri எழுத்தின் அளவு: A A A
11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 5வது கூட்டத்தொடர் பெய்ஜிங்கில் இனிதே நிறைவடைந்தது என்ற தகவலை அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். சீனத் தலைமை அமைச்சரின் அரசுப் பணியறிக்கையை விவாதித்த உறுப்பினர்கள், 833 உரைகள், 6069 முன்மொழிவுகள் மற்றும் 1341 மக்களின் விருப்பங்களை முன்வைத்தனர் என்பதை அறியும்போது மனநிறைவு ஏற்பட்டது. மக்களின் தேவையை உணர்ந்து கொண்டவர்களே, உறுப்பினர்களாக இருப்பதால், மக்களின் வாழ்க்கை மேம்படுத்தும் முடிவுகள் எடுக்கப்படும் என்பது உறுதி என்பதை உணர்ந்து கொண்டேன். சீனாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், இக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மேற்கொண்டதற்காக என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்