சிறுநாயக்கன்பட்டி திண்டுக்கல் மாவட்டம் கே.வேலுச்சாமி
2012-03-19 14:50:55 cri எழுத்தின் அளவு: A A A
உலகின் அனைவரின் கவனத்தை தன்பால் ஈர்த்த 11-வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 5-வது கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் நிறைவு பெற்றதை அறிந்தேன். இக்கூட்டத்தொடரின்போது மாநாட்டின் உறுப்பினர்கள் சுமார் 833 உரைகள், 6069 முன் மொழிவுகள், 1341 மக்களின் விருப்பங்களை கூட்டத்தொடரில் முன்வைத்து விவாதித்திருப்பதின் மூலமாக மக்களுக்கு தாம் செய்யவேண்டிய கடமைகளை மாநாட்டு உறுப்பினர்கள் செவ்வனே செய்திருக்கிறார்கள். இக்கூட்டத்தொடரின் அனைத்து முன் மொழிவுகளையும் அரசு மக்களுடன் கையோடு கைகோர்த்து விவாதித்திருப்பது இக்கூட்டத்தொடரின் மாபெறும் வெற்றியாகும். மாநாட்டின் போது தினந்தோறும் நடைபெற்ற அன்றாட நிகழ்வுகளை தமிழ்பிரிவு விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி.
தொடர்புடைய செய்திகள்