• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாள்
  2012-03-28 11:18:01  cri எழுத்தின் அளவு:  A A A   
2009ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள், 50 ஆண்டுகளுக்கு முன் திபெத்தில் நடைபெற்ற ஜனநாயகச் சீர்திருத்தத்தை நினைவு கூரும் வகையில், திபெத் சட்டமியற்றல் அமைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி, ஆண்டுதோறும் மார்ச் 28ஆம் நாளைத் திபெத்தின் லட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாள் ஆக அனுசரிக்க முடிவு செய்தது.

1961ஆம் ஆண்டு, திபெத்தின் பல்வேறு இடங்கள் பொதுத் தேர்தலை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. அடிமைகள் முதன் முறையாக ஜனநாயக உரிமையைப் பெற்றனர். பல்வேறு நிலை ஆட்சி அமைப்புகள் அத்தேர்தல் மூலம் உருவாக்கப்பட்டன. உற்பத்தி ஊக்கம் முன்னெப் போதும் கண்டிராத அளவில் அதிகரித்தது. 1965ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. தேசிய இனப் பிரதேசத் தன்னடக்கம் என்ற அமைப்பு முறையைத் திபெத் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த தொடங்கியது என்பதை அது கோடிட்டுக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040