BRICS-மாநாடு இன்று வெற்றிகரமாகத் துவங்கியிருக்கிறது.கலந்துகொள்ள
வந்திருக்கும் சீன அதிபர் திரு .ஹு ஜின்டோ அவர்களையும் ,ஏனைய
நாட்டுத் தலைவர்களையும் ,வரவேற்பதில் இந்தியன் என்ற முறையில்
பெருமகிழ்வடைகிறேன்.உலகப் பொருளாதார நிலைத்தன்மை,பாதுகாப்பு ,வளங்கள்
குறித்து இவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.உலகெங்கும் தீவிரவாதம்,அணுச்
சோதனைகள்,ஆளுமைப்போக்கு ,இயற்கை இடர்பாடுகள் ஆகியவை மனித
குலத்தை அச்சுறுத்துகின்றன.ஒரு ஹிரோஷிமா, நாகசாகியையும் ,
செப்டம்பர் -11யையும் இன்னும் மறக்க முடியவில்லையே.புகுஷிமா இடர்பாட்டின்
விளைவை கருத்தில் கொண்டு ,தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தை புறந்தள்ள முடியுமா?
எனவே ,பிரேசில்,ரஷ்யா ,இந்தியா ,சீனா ,தென் ஆப்ரிக்கா தலைவர்கள்
ஆக்க பூர்வ முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம் !வாழ்த்துவோம்!!
மா.உலகநாதன்,திருநீலக்குடி