வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும், அவற்றின் முக்கியத்துவத்தையும், உலக நாடுகளுக்கு ஓங்கி உரைக்கும் ஓர் உன்னத அமைப்பாக BRICS அமைப்பு மாறிவிட்டது. எட்டு நாடுகள் கூட்டமைப்பு மற்றும் இருபது நாடுகள் கூட்டமைப்பு ஆகியவற்றில் கடைநிலைப் பிரதிநிதித்துவம் மட்டுமே வளரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டது. அந்நிலையில், அவ்வமைப்புக்களிலிருந்து வெளியேறி, வளரும் நாடுகளின் சுயமுன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி, வெற்றி கண்டு வரும், ஐந்து நாடுகளின் தலைவர்களுக்கு என் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாய்ப்பிருந்தால், எதிர்காலத்தில் இவ்வமைப்பு மேலும் விரிவாக்கப்பட வேண்டும். மெக்சிகோ, மலேசியா மற்றும் நைஜிரியா போன்ற நாடுகளையும் இதில் சேர்க்கலாம்.
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்