மார்ச் திங்கள் 28ஆம் நாள் சீனாவின் திபெத்திலுள்ள லட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளாகும் திபெத்தின் மக்கள் வாழ்க்கை லட்சியமும் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. திபெத் மக்களின் நபர்வாரி மதிப்பீட்டு ஆயுள், 1959ஆம் ஆண்டில் இருந்த 35.5 வயதிலிருந்து 67 வயதாக அதிகரித்துள்ளது. அதேவேளை, திபெத்தின் கல்வி மற்றும் சமூகக் காப்புறுதித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது. திபெத் மக்களின் அரசியல் உரிமைக்கு பயனுள்ள முறையில் உத்தரவாதம் செய்யப்படுவதோடு, அவர்களின் மத நம்பிக்கைச் சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், திபெத்தின் தலைசிறந்த பாரம்பரியப் பண்பாடும் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுள்ளது. பொட்டாலா மாளிகை, நோர்புலிங்கா, சாகிய கோயில் உள்ளிட்ட தொல் பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பழுது பார்த்துப் பாதுகாப்பதற்கு நடுவண் அரசு பெருந்தொகையை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.திபெத்தின் மக்கள் இதை புரிந்து சீன அரசுக்கு நன்றி செளுத்த வேண்டும்.
விழுப்புரம் எஸ். சேகர்