மூன்றாவது சீன-இந்தியக் கூட்டு மருத்துவ அணியைச் சேர்ந்த 17 மருத்துவர்கள், 27ஆம் நாள் சீனாவின் ஹெ பேய் மாநிலத்தின் ஹுச்சியாச்சுவாங் நகரிலுள்ள பெதூன் சர்வதேச அமைதி மருத்துவமனையில் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் ஹெ பேய் மாநிலத்தில் ஒரு வாரகால மருத்துவத் தானம் செய்து அனுபவப் பரிமாற்றம் கொண்டனர். சீனாவுக்கு உதவி செய்த இந்திய மருத்தவர் கோட்னிஸ், இம்மருத்துவமனையின் முதல் தலைவராகப் பதவி ஏற்றார். இவ்வாண்டு அவர் சீனாவில் மரணம் அடைந்த 70ஆம் ஆண்டு நிறைவாகும்.
சீன-இந்திய நட்புறவின் பாலமாக, இவ்விரு நாடுகளின் நட்புறவு நீண்டகாலமாக வளர, சீன-இந்தியக் கூட்டு மருத்துவ அணி பாடுபடுவதாக இவ்வணியின் இந்தியக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.