புதுக்கோட்டை ஆர் ஜெயஸ்ரீ
2012-11-09 16:29:53 cri எழுத்தின் அளவு: A A A
08-11-2012 அன்று காலையில் துவங்கியது 18 வது தேசிய மா நாடு உடனடியாக இரவு நிகழ்ச்சியில் கலைமகள் மற்றும் தமிழன்பன் இருவரும் இணைந்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல சிறப்பான செய்திகளை மாநாடு தொடர்பாக தெரிவித்ததை கேட்ட எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது, அரசு சாரா மற்றும் வெளி நாட்டு பிரதி நிதிகளோடு ஒரு காலத்தில் விவசாயியாக இருந்து இன்று கோடிஸ்வரராக மாறியுள்ள மக்கா சோளம் பயிர் செய்தே மிகப்பெரிய சாதனைகளை புரிந்து சீனாவே ஏன் உலகே இன்று திரும்பிப்பார்க்கும் நிலையில் உயர்ந்துள்ள அந்த மாம்னிதரின் உழைப்பும், ஆர்வமும் வீண் போகவில்லை. மேலும் அவரைப்போன்று பலர் இந்த மா நாட்டில் பங்குக்கொண்டு வருகின்றார்கள் என கலைமகள் முத்தாய்ப்பாக சொன்ன கருத்து என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது.உழைக்கும் திறனும் உயரவேண்டும் என்கின்ற ஆர்வமும் இருக்கும் யார் வேண்டுமானாலும் சிகரத்தைத் தொட்டு விட முடியும் என உணர்த்தியது. பாராட்டுக்கள்
தொடர்புடைய செய்திகள்