248 கோடி ஆண்டுகள் முதல் 232 கோடி ஆண்டுகள் வரை முந்தைய காலத்தில் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உருவாகியது. ஆனால் அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. மேலும் அக்காலத்துக்கு முன் புவி வளிமண்டலத்தின் நிலைமை பற்றியும் விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
அண்மையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இது பற்றிக் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். நுண்ணுயிரிகளின் தீவிரச் செயல்பாடுகளால், புவியின் முற்கால வளிமண்டலம் காலமுறைமையின் படி மாறியிருந்தது. இந்த மாற்றம் நீரகக்கரிமம் இல்லாத நிலைக்கும் நீரகக்கரிமம் நிறைந்த நிலைக்கும் இடையில் நிகழ்ந்தது. நீரகக்கரிமம் நிறைந்த வண்ணத்தில் புவியின் வளிமண்டலம் கரிம பொருட்கள் நிறைந்த காற்றினால் சுற்றிச் சூழப்பட்டிருந்தது. இத்தகைய காலமுறைமையின் படியான மாற்றம் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தோன்றியது வரை தான் இருந்தது. சனிக் கோளின் 6வது துணைக்கோளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட பிறகு அறிவியலாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
மேற்கூறிய காலத்தின் கடல் வண்டலை ஆராய்ந்த பின், புவியின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்ததாக ஆய்வுக் குழுவின் தலைவரும் பிரிட்டன் நை காஸ்டல் பல்கலைக்கழகத்தின் நிலவியல் நிபுணருமான ஆப்லி கூறினார்.
புவி வளிமண்டலத்தில் நிறுத்தி துகள்களின் குறிப்பாக கரிம பொருட்களின் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த ஆய்வு முடிவு முக்கியமானதாகும் என்று அமெரிக்க கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின் சென் டியாகோ பிரிவைச் சேர்ந்த இயல்பியல் கல்லூரியின் முதல்வர் மார்க் டிமன்ஸ் சுட்டிக்காட்டினார்.