© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுகாதார ஆணையம் வெளியிட்ட புதிய தகவலின்படி, நவம்பர் 20ஆம் நாள் சின்ச்சியாங் பிரதேசத்தில் புதிதாகக் கரோனா தொற்றுக்குள்ளானவர் மற்றும் அறிகுறியற்ற பாதிப்பாளர் என்று எவரும் இல்லை. காஷ்கர் பகுதியில் அறிகுறியில்லாமல் பாதிப்புக்குள்ளான கடைசி 2 பேர் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 24ஆம் நாள் முதல் நவம்பர் 20ஆம் நாள் வரை, சின்ச்சியாங் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருந்த 78 பேர் மருத்துவமனையில் குணமடைந்து வீடு திரும்பினர். அறிகுறியில்லாமல் தொற்றுக்குள்ளான 352 பேர் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.