சொந்த ஊருக்குத் திரும்பாத மக்களின் வசந்த விழா கொண்டாட்டம்
2021-02-13 16:19:14

சொந்த ஊருக்குத் திரும்பாத மக்களின் வசந்த விழா கொண்டாட்டம்_fororder_src=http-%2F%2Fimg1001.pocoimg.cn%2Fimage%2Fpoco%2Fworks%2F41%2F2009%2F0207%2F01%2F45886488200902070156591442422721363_009_45886488&refer=http-%2F%2Fimg1001.pocoimg

வசந்த விழா, சீனாவின் மிக முக்கியமான விழாவாகும். சீனர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வசந்த விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு கரோனா வைரஸ் தடுப்பு பணியின் காரணமாக, நிறைய சீனர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், பணி புரியும் நகரத்தில் வசந்த விழாவைக் கொண்டாடினர்.

புள்ளிவிவரங்களின் படி, வசந்த விழாவுக்கு முன், சீனாவின் தொடர் வண்டி மற்றும் விமானத்தின் மூலம் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இவ்வாண்டு சீனாவின் 36 பெரிய மற்றும் நடுநிலை நகரங்களில் சொந்த ஊருக்குத் திரும்பாத மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட 4 கோடியே 80 இலட்சம் அதிகரித்துள்ளது.

வசந்த விழா விடுமுறை காலத்திலும், பொது மக்களின் நிரந்தர வாழ்க்கையைப் பேணிக்காக்கும் வகையில், எரியாற்றல், போக்குவரத்து துறையினர்கள், விடுமுறையின்றி வேலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.