© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ வட்டாரப் பிரதிநிதிகள் நேரடி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். காஷ்மீர் உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைக் கண்டிப்பாக பின்பற்றுவதென இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் 25ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒன்றுக்கொன்று நன்மை பெறுவது மற்றும் தொடரவல்ல அமைதியை நனவாக்க, இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று கவனம் செலுத்தும் மையப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அமைதியைச் சீர்குலைப்பதையும், வன்முறை சம்பவத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.