© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இந்தியாவின் பிரதான சுகாதார நிறுவனமான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநர் ரான்டீப் குலேரியா செவ்வாய்கிழமை கூறுகையில், கோவிட்-19 நோய் தொற்றால் குழந்தைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என கருதவில்லை. குழந்தைகளுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான சான்று அல்லது தரவு இல்லை என்று தெரிவித்தார்.
நோயுற்ற நிலையில் இருந்த குழந்தைகளைத் தவிர்த்து, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவமனையில் சேராமல் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.