சீனாவின் திபெத் அமைதியாக விடுதலை பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவு மற்றும் மனித உரிமை இலட்சிய வளர்ச்சி கூட்டம்
2021-09-25 18:45:47

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 48ஆவது கூட்டத்தொடரின் போது சீன திபெத் அமைதியாக விடுதலை பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவு மற்றும் மனித உரிமை இலட்சிய வளர்ச்சி பற்றிய கிளை கூட்டம் 24ஆம் நாள் நடைபெற்றது. சீன மனித உரிமை ஆய்வகத்தின் தலைமையில், சீனாவின் வடமேற்கு சட்டப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு மையம் இக்கிளை கூட்டத்தை நடத்தியது. சீன பல்கலைக்கழகங்களையும் ஆய்வகங்களையும் சேர்ந்த அறிஞர்கள் பலர், சீனாவின் திபெத் அமைதியாக விடுதலை பெற்ற 70 ஆண்டு காலத்தில், பொருளாதார உரிமை, கல்வி பெற்ற உரிமை, ஆரோக்கிய உரிமை ஆகியவை குறித்து விவாதித்தனர்.