4ஆவது உலக ஊடக உச்சிமாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2021-11-22 21:21:51

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் 4ஆவது உலக ஊடக உச்சிமாநாட்டுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

அவர் கூறுகையில், தற்கால உலகில் கடந்த 100 ஆண்டுகளாகக் கண்டிராத மாற்றங்களும், கோவிட்-19 நோய் பரவல் நிலைமையும் பின்னிப்பிணைந்து வருகின்றன. சர்வதேச நிலைமை சிக்கலாக மாறி வரும் நிலையில், ஊடகங்கள் முக்கியமான சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வுச்சிமாநாட்டில் பங்கெடுத்த விருந்தினர்கள், நடப்பு தலைப்பு பற்றி ஆழமாக விவாதித்து, ஒத்த கருத்துகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மனித குலத்தின் பொது மதிப்பை வெளிக்கொணர்வதற்கும், மனித குல பொது சமூகத்தை உருவாக்குவதற்கும் பங்காற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.