COVID-19 பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - இந்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தல்
2021-11-24 18:47:43

இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம், வாராந்திர COVID-19 சோதனை விகிதங்களில் சரிவை மேற்கோள் காட்டி, பல மாநிலங்களுக்கு COVID-19 சோதனையை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதுமான சோதனைகள் இல்லாத நிலையில், தொற்று பரவலின் உண்மையான அளவைக் கண்டறிவது கடினமாக  உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களுக்கான பயணங்கள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அதிக சோதனைகளை செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.