முனுகபட்டு பி.கண்ணன்சேகர்,
2011-05-24 17:06:42 cri எழுத்தின் அளவு: A A A
ரோம் நகரில் துவங்கியுள்ள திபெத் பண்பாட்டு வாரம், சிறப்பாய் நடைபெற்று வருகிறது. இதில் நிழற்படக் கண்காட்சி, கருத்தரங்கு, கலை நிகழ்ச்சி அரங்கேற்றம் முதலியவற்றின் மூலம், சீனாவின் திபெத் பிரதிநிதிக் குழு, வெவ்வேறு திசையிலிருந்து திபெத்தின் நீண்டகால மானிடவியல் வரலாற்றையும், செழுமையான தேசிய இனப் பண்பாட்டையும், மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கைக் காட்சிகளையும் எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் மூலம், இத்தாலி மக்களிடம் மிக நேரடியான முறையில், ஓர் உண்மையான திபெத்தையும் அறிமுகப்படுத்துகிறது. அழகான திபெத் எனும் புகைப்படக் கண்காட்சி, திபெத் பண்பாட்டு வாரம் உள்ளிட்ட சீனப் பண்பாட்டு ஆண்டின் நடவடிக்கைகள், பொதுவாக, சீன-இத்தாலி உறவை மேலும் முன்னேற்றும். பண்பாட்டில் ஒன்று மற்றதன் புரிந்துணர்வின் மூலம், இரு நாட்டுப் பண்பாட்டு உறவை முன்னேற்றலாம். அத்துடன், பொருளாதாரத் தொடர்பையும் தூண்ட முடியும் என்று சீன கருதுகிறது. இதன் மூலம் இருதரப்பு உறவை நெருக்கமாக செய்ய வாய்ப்பு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்