எளிமையாக இன்பமான வாழ்க்கை வாழும் யூதியன் வட்ட மக்கள்
2020-12-03 18:06:38

எளிமையாக இன்பமான வாழ்க்கை வாழும் யூதியன் வட்ட மக்கள்

சின்சியாங் பிரதேசத்தில் உள்ள ஹேத்தியன் பகுதியின் யூதியன் வட்டத்தில் சீன அரசு மானியத்தில் கீழ் 200க்கும் மேற்பட்ட உய்கூர் இன குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. உய்கூர் இனப் பாணியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் இணையம் உள்ளிட்ட  சகல வதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.கிராமிய மணம் மாறாமலும் நகரத்தின் முகத்தோடும் மிளிரும் இப்பகுதியில் வாழும் மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, வியாபாரம் உள்ளிட்டவற்றின் மூலம் வருமானம் ஈட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அப்பகுதியில் வாழும் அப்துகவேல் என்பவரை சந்தித்து கேட்ட போது, அவர் கூறியதாவது:

இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் குளிகாலத்துக்கான வெப்பமூட்டும் வசதி இணைய வசதி உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. மேலும் விவசாய நிலம், தோட்டம் வளர்ப்புக்கான இடம், கால்நடை வளர்ப்புக்கான இடம் என எல்லாமும் இங்கு உள்ளன. வேளாண்மை இல்லாத நேரங்களில் இங்குள்ள மக்கள் ஆடை தயாரித்தல் பணியில் ஈடுபடுகிறோம்.  மேலும் பாலைவனத்தில் ரோஜா வளர்ப்பு பணியும் செய்து வருவார்கள் என்றார்.

எளிமையாக இன்பமான வாழ்க்கை வாழும் யூதியன் வட்ட மக்கள்

முன்பு விவசாயப் பணியில்  ஈடுபட்டு வந்த அப்துகவேல் தற்போது வியாபாரம் செய்து வருகிறார். அவர் வியாபாரத்துக்கான பொருட்களை இணையம் மூலம் வாங்கி இங்கே விற்பனை செய்கிறார். இப்பகுதியில் அடிக்கடி மணல் புயல் ஏற்பட்டு வந்தது. எனவே அரசின் ஏற்பாட்டில் மரங்கள் நடப்படது. தற்போது மணல் புயலின் தாக்கம் குறைந்துள்ளது. இங்குள்ள மக்கள் ஓய்வு நேரங்களில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவது வழக்கம். ஆனால் ஒருபோதும் இந்த பகுதியைவிட்டு வேறு இடத்தில் குடிபெயர விரும்ப மாட்டார்கள்.

இங்கு வாழும் மக்களுக்கு சகல வசதிகளும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன மாதம் மூவாயிரம் யுவான் இருந்தால் போதும் இங்கு எளிமையான இனிமையான வாழ்க்கை வாழலாம் என்றார்.மேலும் கல்வி வசதியைப் பொத்தவரை பள்ளிப்படிப்புக்கான அனைத்து செலவும் அரசு ஏற்கிறது. மாணவர்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.  இந்த வட்டத்தில் ஆட்டுப் பண்ணைகள் உள்ளன. இதில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுதவிர ஒவ்வொருவர் வீட்டிலும் கால்நடைகள் வளர்ப்பதன் மூலம் வருமானம் பெறுகின்றனர். அந்த வகையில் இப்பகுதி மக்கள் எளிமையான இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.