சீனச் சமூகத்தின் உயர்வான நிர்வாக நிலையைக் காட்டும் வசந்த விழாவுக்கான சிறப்பு கொண்டாட்டம்
2021-02-14 16:43:15

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசின் ஆலோசனையை ஏற்று, இவ்வாண்டின் வசந்த விழா காலத்தில், பெருமளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவில்லை.

அவர்கள் பணி புரியும் ஊரில் வசந்த விழாவைக் கொண்டாடினர். இது சீன சமூகத்தின் நிர்வாக நிலைமையின் உயர்வைக் காட்டுகிறது.

ஊர் திரும்பாமல் அதிகமானோர் பெய்ஜிங், ஷாங்காய் முதலிய மாநகரங்களில் இவ்விழாவைக் கொண்டாடினர், இதனால் அந்த மாநகரங்களில் பொருட்களை வாங்கும் தேவை அதிகரித்துள்ளது. உள்ளூர் அரசு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, சந்தையின் வினியோகம் மற்றும் விலையின் நிதானத்தை நிலைநிறுத்தியுள்ளது. அதே வேளையில், சீனாவின் பல்வேறு இடங்கள் சிறப்பான கொள்கைகளை வகுத்து, சொந்த ஊருக்குத் திரும்பாத மக்களுக்கு வசந்த விழாவின் அன்பை விளைவித்துள்ளன.

வசந்த விழாச் சிறப்புக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. ரொக்க உதவி, இலவச திரைப்பட நுழைவுச்சீட்டு முதலியவை வழங்குவதன் மூலம் சீனா பல்வகை வழிமுறையின் மூலம் மக்கள் பணி புரியும் இடங்களில் வசந்த விழா கொண்டாடுவதை ஊக்குவிக்கிறது என்று பிரிட்டனின் டி டைலி டெலிகிராஃப் அண்மையில் செய்தி வெளியிட்டது.