பொய் செய்தியைத் தோற்கடிக்கும் சின்ஜியாங்கின் உண்மைகள்
2021-02-25 12:15:13

பிரான்ஸின் புகழ்பெற்ற எழுத்தாளர் மேக்சிம் விவாஸ் உய்கூர் இனம் பற்றிய பொய் செய்தியின் முடிவு எனும் புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். இப்புத்தகத்தில் அவர் சின்ஜியாங்கில் நேரில் அனுபவித்த விஷயங்களின் மூலம், மேலை நாடுகளின் சில செய்தி ஊடகங்கள் சின்ஜியாங் பற்றி இயற்றிய பொய்களை வெளிப்படுத்தினார்.

அவரைப் போன்று, சின்ஜியாங்கில் 5 முறை பயணம் மேற்கொண்ட ஓய்வு பெற்ற பிரிட்டன் காவற்துறை அதிகாரி ஜெர்ரி கிரே கூறுகையில், மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களின் தகவல்களை விட, என் கண்களால் கண்டு நான் மேலும் நம்பிக்கை கொண்டேன் என்று கூறினார்.

பிபிசி, நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் முதலிய மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் சின்ஜியாங் பற்றி பொய் செய்திகளை வெளியிட்டு, சர்வதேச பொது கருத்தை தீய நோக்கத்துடன் வழிக்காட்டுவதை உண்மைகள் காட்டுகின்றன.

ஆனால், பொய்கள் உண்மைகளை மூடிமறைக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, 100க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த சுமார் 1200 தூதரக அதிகாரிகள், செய்தியாளர்கள், மதவாதிகள் முதலியோர் சின்ஜியாங்கில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலதிக வெளிநாட்டவர்கள் சின்ஜியாங்கில் பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறோம். அவர்களது உண்மையான அனுபவங்கள், மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை பொய்யாக இருப்பதைக் காட்டுவது உறுதி!