அமெரிக்க கேப்டல் ஹில் கலவரம் ஓராண்டு நிறைவு
2022-01-07 20:48:25

ஜனவரி 6ஆம் நாள் அமெரிக்க கேப்டல் ஹில் கலவரத்தின் ஓராண்டு நிறைவு நாளாகும். கடந்த ஓராண்டில் அமெரிக்கா ஆழ்ந்த பிரிவினையில் சிக்கிக்கொண்டுள்ளதோடு, அமெரிக்க ஜனநாயகமும் சீர்குலைந்து வருகின்றது.

அமெரிக்க ஏபி நிறுவனம் அண்மையில் நடத்திய ஒரு ஆய்வு முடிவின்படி, கேப்டல் ஹில் சம்பவம் ஒரு வன்முறை சம்பவமல்ல என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்களில் 30 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். ஆனால், 90 விழுக்காட்டு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இதனை மிக அல்லது தீவிர வன்முறை சம்பவமாகக் கருதுகின்றனர். சீற்றத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் அரசியல் கட்சிகளுக்கிடையிலான போட்டி வசதியாக பயன்படுத்தப்படுவது அமெரிக்க ஜனநாயகத்தின் வெட்கக்கேடாகும் என்று கூறலாம்.  

ஜனநாயகம் ஒரு அலங்கார ஓவியம் அல்ல. இது மக்களின் தேவைக்கிணங்க பிரச்சினைகளின் தீர்வில் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டியுள்ள ஒன்றாகும்.