பொது மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை நோக்கமும், பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தின் முக்கிய வழிமுறையுமாகும். எனவே, நிதி நெருக்கடி படிப்படியாக தணிவடைந்த போதிலும், பொது மக்களின் வாழ்க்கை பற்றிய பிரச்சினை மீதான கவனத்தை அரசு குறைக்கக் கூடாது. இப்பிரச்சினையை, பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தை விரைவுபடுத்தும் முக்கிய வழிமுறையாகக் கொண்டு, மேலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் அரசுப் பணியறிக்கையில் கூறியதாவது:"பொருளாதாரத்தை வளர்ப்பது, பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது, சமூக நேர்மை மற்றும் நியாயத்தைப் பேணிக்காப்பது ஆகியவற்றின் ஒன்றிணைப்பில் ஊன்றி நின்று, பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். நேர்மை மற்றும் நியாயத்தை பெரிதும் பேணிக்காத்து, பொது மக்கள் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியின் பலன்களை கூட்டாக அனுபவிக்கச் செய்து, சமூகத்தின் இணக்கம் மற்றும் நிதானத்தை தூண்ட வேண்டும்" என்று வென்ச்சியாபாவ் கூறினார்.
பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியைச் செவ்வனே செய்வது, சீனச் சமூகம் இணக்கமாக வளர்ச்சியடைவதை மேம்படுத்துவதற்கு தவிர்க்க முடியாத கோரிக்கையாகும்.