முழுக் கட்சியினர் மற்றும் அனைத்துச் சீன மக்களுடன் ஒன்றுபட்டு, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சிக்காகத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வது, எங்கள் பொறுப்பாகும் என்றும் சீ ச்சின்பிங் கூறினார்.
உலகத்தைச் சீனா மேலும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன், சீனாவை உலகம் மேலும் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில், சீனாவுக்கும் உலகத்துக்குமிடையிலான புரிந்துணர்வை அதிகரிப்பதற்குச் செய்தியாளர்களும் நண்பர்களும் சிறப்பான பங்காற்ற வேண்டுமென சீ ச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.