• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விவசாயிகளுக்கு நன்மை கொண்டு வந்தவர்
  2010-01-26 10:23:01  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த நடவடிக்கை தொடர்ந்து பயன் பெற்றுள்ளதில் வேளாண் நாடான சீனா கவனம் செலுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பரப்புரை செய்வதில் சீனா உலகின் முன்னணியில் உள்ளது. திரு Hiramatsu morihiko இது பற்றி மீளாய்வு செய்கிறார்.
வெளிநாடுகளில் சீனாவின் ஷாங்காய் புறநகரில்"ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்தி பொருள்"என்ற இயக்கம் மிக முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் புறநகரில் ஓரு ஆலைக்கு ஓரு உற்பத்தி பொருள் என்ற முழக்கம் பரப்பப்பட்டது. நடவடிக்கையின் போது உற்பத்திபர் பொருட்களின் தரத்தை அறிவியல் முறையில் நிர்வகிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பின்னர், ஹூஹான் நகரிலும் ஒரு கிராமத்துக்கு ஓரு கருவூலம் என்ற செயல்பாடு நடைமுறையானது. சீ ஆன் நகரில் ஒரு கிராமத்துக்கு ஓரு உற்பத்திப் பொருள் பற்றிய 2வது ஆய்வுக் கூட்டத்தில் சீனாவின் முன்னாள் துணை அரசுத் தலைவர் ச்சுன்சிங்ஹுன் உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் முக்கிய பிரமுகர்களும் மற்றும் வேளான் துறையினர்களும் கலந்து கொண்டனர். அப்போது முதல் ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்தி பொருள் என்ற முயற்சி மேலும் வளர்ச்சியடைய தொடங்கியது. சீன வேளாண் வளர்ச்சியை முன்னேற்றி சீன விவசாயிகள் வருமானத்தை அதிகரித்து வறுமையிலிருந்து விடுபட இது துணைபுரிந்தது. அதேவேளையில் அரசு சாரா வடிவத்தில் அது சீன-ஜப்பான் நட்புறவுக்கு சிறந்த அத்தியாயத்தை பொறித்துள்ளது. இது பற்றி மீளாய்வு செய்த போது திரு Hiramatsu morihiko அனுபவத்தை கூறினார்.


மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகிய பின் சீனத் துணை அரசுத் தலைவர் ச்சுன் சிங் ஹுன் 2005ம் ஆண்டு பெய்ஜிங் மக்கள் மகாமண்டபத்தில் என்னை சந்தித்துரையாடினார். அப்போது சீன-ஜப்பான் உறவு அப்போதைய ஜப்பானிய தலைமை அமைச்சர் யசுகுனி கல்லறைக்குச் சென்று இரங்கல் தெரிவித்த நிகழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. சீனாவின் வேளாண் மற்றும் விவசாயப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். நீங்கள் பரப்புரை செய்த ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்தி பொருள் என்ற நடவடிக்கை சீனக் கிராமப்புறங்களில் பரவலாக்கப்பட வேண்டும். இரு நாட்டு மக்களுக்கிடையில் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்வதன் மூலம் அதிகாரவட்டாரம் இழைத்த தவறுகள் நீக்கப்படுவதற்கு வாய்ப்புகளை வழங்கும் என்று திரு ச்சுன் சிங் ஹுன் கூறியதை திரு Hiramatsu morihiko சீன வானொலி செய்தியாளரிடம் மீளாய்வு செய்து கூறினார்.
அப்போது முதல் தென் சீனாவின் யூனான் மாநிலம் முதல் வட சீனாவின் டாலியென், சங்யான் முதலிய இடங்கள் வரை ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்தி பொருள் என்ற நடவடிக்கை மேலும் பரப்புரை செய்யப்பட்டது.


இந்த முறை நடைபெற்ற பத்து சர்வதேச நண்பர்களின் தேர்வில் ஒருவராக இடம் பெற்ற திரு Hiramatsu morihikoமிகவும் கட்டுப்பாட்டுடன் தாம் ஆற்றிய பங்கை மதிப்பிட்ட போது அவர் மேற்கொண்ட முயற்சிகளை கிராமப்புறங்களில் பொருளாதாரத்தை வளர்க்கும் மிக அடிமட்ட பணியாக வருணித்தார். இது பற்றி அவர் கூறியதாவது.
பலர் ஜப்பான்-சீன நட்புக்காக பாடுபட்டு வருகின்றனர். வேகமாக வளர்ச்சியடைந்த சீனாவில் குறிப்பிட அளவில் பின்தங்கிய கிராமப்புறங்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் பிரச்சினைகள் நிலவியுள்ளன. இவற்றில் கவனம் செலுத்திய நான் அவற்றுக்கென பங்கு ஆற்றியவர்களில் ஒருவராக விளங்குகின்றேன். இந்த சர்வதேச நண்பர்களது தேர்வில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கண்டு பெருமையடைந்துள்ளேன். ஜப்பானிலுள்ள மதம் எழுத்துக்கள் முதலிய பண்பாடுகள் சீனாவிலிருந்து பரவின. இரு நாடுகளுக்கிடையில் முன்பு போர் வரலாறு நிலவிய போதிலும் அவற்றுக்கிடையிலான நட்பு உலகின் அமைதிக்கு முக்கிய பங்கை வெளிக்கொணரும். கிராமப்புறத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட்டு முயற்சிகள் மூலம் ஜப்பான்-சீன நட்புக்கும் உலகின் அமைதிக்கும் பங்கு ஆற்றுவது எங்கல் மிக பெரும் விருப்பமாகும் என்று அவர் கூறினார்.


1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040