• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
 அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு
  2011-12-20 15:29:11  cri எழுத்தின் அளவு:  A A A   

அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 23-வது கருத்தரங்கு, திட்டமிட்டபடி, டிசம்பர் திங்கள் 18 ஆம் நாள், பாண்டிச்சேரி ஸ்ரீசாய்ராம் விடுதி கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இவ்விழாவில், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் முன்னாள் சிறப்பு நிபுணர் ந.கடிகாசலம், சீன வானொலி அறிவிப்பாளர்களும், தற்போது பாண்டிச்சேரியில் தங்கி தமிழ்மொழி கற்பவர்களுமான தேன்மொழி, மோகன் மற்றும் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கிற்கு, மன்ற செயலாளர் பல்லவி திரு. கே.பரமசிவன் முன்னிலை வகிக்க, மன்றத் தலைவர் திரு.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். பாண்டிச்சேரி மாநில சீன வானொலி நேயர் மன்ற செயலாளர் திரு. ஜி.இராஜகோபால் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், ஆண்டுக்கருத்தரங்கு இனிதே துவங்கியது. வரவேற்புரைக்குப் பின், திரு.எஸ்.செல்வம் தலைமை உரையை வழங்கினார். அதில், கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாளிரவு, பெய்ஜிங்கில் முனைவர் ந.கடிகாசலம் அவர்களை முதன்முதலாக சந்தித்தது பற்றி நினைவுகூர்ந்து, தமிழ்ப்பிரிவின் மூன்று பணியாளர்களான தேன்மொழி, மோகன் மற்றும் ஜெயா ஆகியோர், பாண்டிச்சேரியில் தமிழ்மொழி கற்க வந்ததன் நோக்கம் பற்றியும் எடுத்துக் கூறினார். அன்றி, சீன வானொலியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட முனைவர் ந.கடிகாசலம் மற்றும் கலைவாணன் இராதிகா ஆகியோரின் சீனப் பயண அனுபவங்களின் மீதான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.

1 2 3 4 5 6
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040