சந்திர நாள்காட்டியின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்ட் பதினைந்தாம் நாள், தேவதை அம்மாவின் பிரிவை எண்ணி மகன் தேம்பி அழ தொடங்கினார். அந்த அழுகையை கேட்ட வுகாங் தெய்வம் பரிவுக் கொண்டு, குழந்தையை வானுலகம் கொண்டு சென்றார். மகனை கண்டு மகிழ்ச்சியடைந்த தேவதை நிலக்கடலை மற்றும் வாதாம் பருப்புகளால் கேக்குகள் செய்து மகனுக்கு வழங்கினார். அவர்களின் வாழ்க்கையை அறிந்த வானுக மாளிகையின் தலைவர் யுதீ மனமுருகி, குழந்தையை புவிக்கு திருப்பி அனுப்பினார்.