30 ஆண்டுகளாக வெளியீட்டு துறையில் ஈடுபட்டுள்ள திரு இரவி தமிழ்வாணன், சீனத் தமிழொலி எனும் தமிழ் பிரிவின் இதழை வெகுவாகப் பாராட்டினர். வண்ணமான அதிக அம்சமுடைய இந்த இதழை அவர் மிகவும் விரும்புகிறார். சீன வானொலி நிலையம், இரு நாடுகளின் நட்புப்பாலம் போல முக்கிய பங்காற்றுவதாக அவர் கருத்து தெரிவித்தார். எழுத்தாளர் பழனியப்பன், தமிழ் பிரிவின் இளைய பணியாளர்களுக்கு தங்களது புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். இரவி தமிழ்வாணன், சீன வானொலி தமிழ் பிரிவுடன் ஒத்துழைப்பது பற்றி கலைமகளிடம் விவாதித்தார்.