ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்கம் நாளுக்கு நாள் நெருங்கி வருவதுடன், சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர்களில், சீனத் தலைவர்கள், பிரதிநிதிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கவனம் செலுத்தும் நிகழ்ச்சியாக மாறியது.
தேசிய மக்கள் பேரவை பிரதிநிதி Zhu Guo Ping அம்மையார், ஷாங்காய் மாநகரின் Chang Ning பிரதேசத்தின் Hong Chu குடியிருப்பு கமிட்டித் தலைவர் ஆவார். இக்குடியிருப்புப் பிரதேசத்தில் வாழும் பல குடும்பங்கள், உலகப் பொருட்காட்சிக்கான உபசரிப்பு குடும்பங்களாக மாற விண்ணப்பித்துள்ளன. Zhu Guo Ping அம்மையார் கூறியதாவது:
"உலகப் பொருட்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களை உபசரிக்கும் குடும்பங்கள், நண்பர்களுடன் பழகி, மகிழ்ச்சி தர முடியும் என்று ஷாங்காய் மாநகரவாசிகள் கருதுகின்றனர். அவர்கள் இதில் பெருமை அடைகின்றனர். பார்வையாளர்களை உபசரிக்கும் குடும்பங்களாக மாற வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.