இது வரை, சுமார் 240 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள உறுதிப்படுத்தியுள்ளன. திட்டப்படி, 7 கோடி மக்கள் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் பயணம் மேற்கொள்வர். அவர்களில், 35 லட்சம் மக்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர். துருக்கியைச் சேர்ந்த Osman Erol, இவ்வாண்டின் ஆண்டுக்கூ்ட்டத்தொடர்கள் பற்றிய செய்தி அறிவுப்புப் பணிக்காக வந்துள்ள செய்தியாளர் ஆவார். அவர் கூறியதாவது:
"உலகப் பொருட்காட்சி பற்றி செய்தி அறிவிப்பில் நான் பங்கெடுப்பேன். உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் அளவில் மிகப் பெரியது ஷாங்காய் உலகப் பொருட்காட்சி. இது ஷாங்காய் மாநகருக்கு மட்டுமின்றி சீனாவின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அடுத்து, சீனாவின் இன்னொரு சிறப்பு நிகழ்ச்சி இதுவாகும்" என்று அவர் கூறினார்.