2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அக்டோபர் 31ஆம் நாள் நிறைவுற்றது. வளரும் நாடு ஒன்றில் உலகப் பொருட்காட்சி நடைபெற்றது இதுவே முதல்முறை. மொத்தம் 246 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. இவ்வாண்டு மே முதல் நாள் துவங்கியது முதல், 184 நாட்கள் நீடித்த காலத்தில், 7 கோடியைத் தாண்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இப்பொருட்காட்சியைப் பார்வையிட்டனர். உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் இது புதிய பதிவை உருவாக்கியுள்ளது. சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் உலகப் பொருட்காட்சியின் உச்சி கருத்தரங்கில் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது—
"'மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்க்கை' என்ற தலைப்பிலான நடப்பு உலகப் பொருட்காட்சி, தற்கால நாகரிகச் சாதனைகளை முழுமையாக வெளிப்படுத்தி, நகர வளர்ச்சியை ஆராயும் மனித குலத்தின் கூட்டு அறவுத்தேடலைத் திரட்டி, உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் புதிய பதிவுகள் பலவற்றை உருவாக்கி, ஒளிமயமான பக்கத்தை தீட்டியுள்ளது" என்று கூறினார்.